பொன்குன்னம் வர்க்கி
தமிழில்- உதயசங்கர்
நான் ஒரு எழுத்தாளனா? இது நான் பலசமயம் என்னுடைய மனசாட்சியிடம் கேட்கிற ஒரு கேள்வி. இதற்குப் பதில் சொல்வதற்கான முழு அதிகாரம் நிறையப்பேர்களுக்கு இருப்பதால் நான் அவர்களை நெருங்குவதற்குத் தயாரானேன். என்னுடைய அழைப்பில்லாமலே வரக்கூடிய ஏராளமான பதில்களுக்கு நான் விலை கொடுத்திருக்கிறேன். அவற்றில் சில அநுபவங்களைத் தான் இங்கே நான் தெளிவுபடுத்த ஆசைப்படுகிறேன். என்னுடைய கதைகளைப் பற்றி எனக்கு ஆத்மநம்பிக்கை தந்த அநுபவங்கள் அவை.
மீனச்சில் தாலுக்காவில் ஓரிடத்தில் ஒரு கயிறு விற்கும் கடையின் பின்னாலுள்ள சிறிய ஒரு அறையிலிருந்து கொண்டு நான் கதை எழுதிக் கொண்டிருப்பேன். தடியனான ஒரு ஆள் வந்து நின்றான். நிலையில் கைகளை ஊன்றிக் கொண்டு சரிந்து தாழ்கிற தலையோடு அவன் ஏதோ சொன்னான். தனிமையில் அகப்பட்டிருந்த என்னுடைய மனமோ, செவிகளோ, அதைக் கவனிக்கவில்லை.
“ டேய் போதும் என்ன? “ என்று கத்தினான்.
” போ………வனே..நீ கதை எழுதுகிறவனாடா? “
போதையின் உச்சத்தினால் அவனுடைய தலை நேராக நிற்கவில்லை. ஆனால் அந்தச் சிவந்தகண்களிலிருந்து வெறுப்பை வெளிப்படுத்திக் கொண்டே அவன் தொடர்ந்து கேட்டான்,
“ நீ சோகேனின் மகனாடா? “
ஆள் தெரியாமல் தவறாகப் பேசுகிறானோ. நான் சந்தேகப்பட்டேன். அந்த மனிதனை எப்போதோ பார்த்திருக்கிறேன். அவ்வளவு தான். நான் கேட்டேன்,
“ எங்கிட்ட தான் பேசுறீங்களா? “
“ பின்ன யாரிட்டடா உங்கப்பங்கிட்டயா.”
என்று அவனும் கேட்டான். எனக்கு வியர்த்து விட்டது. கள்ளு குடிக்காமலேயே என்னுடைய தலை பம்பரம் போலச் சுற்றிக் கொண்டிருந்தது. தலையைப் பிடித்துக் கொண்டே நான் மேசையின் மீது சாய்ந்தேன். இந்த நேரத்தில் அங்கே ஆட்கள் சிலர் வந்தனர். அவர்கள் அவனை என்னுடைய அறைக்கு முன்னாலிருந்து தள்ளிக் கொண்டுபோக முயற்சி செய்தனர்.
அவனைத் தூரமாய் கொண்டுபோய் விட்ட பின்பு சிலர் என்னிடம் என்ன காரணம் என்று கேட்டனர். எனக்கும் அது தான் தெரியவில்லை.
“ நீ கதை எழுதுவாய் இல்லையாடா? “ என்று கேட்டதன் ரகசியமும் புரியவில்லை. கொஞ்சநாட்களுக்கப்புறம் அவன் என்னுடைய சிநேகிதனாகி விட்டான். அந்த மனிதனிடமிருந்து முன்பு அவன் அப்படி நடந்ததற்கு என்ன காரணம் என்ற ரகசியத்தைப் புரிந்து கொண்டேன். பிரபலமான ஒரு புரோகிதர் தான் அவனை என்னிடம் அனுப்பியது. கள்ளு குடிக்க ஐந்து ரூபாய் கொடுத்து,
“ அவனை அவமானப்படுத்த வேண்டும்.. எழுதறதுக்காக ரெண்டடி கொடுக்கவேண்டும் “
என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். காரணம் நான் வைதீகர்களைப் பற்றிக் கதையெழுதியது தான்.
ஒரு தடவை ஒரு பெண் என்னுடைய பெயருக்கு ஒரு கடிதம் அனுப்பி அவள் என்னை ஒரு தடவை பார்க்கவேண்டும் என்று எழுதியிருந்தாள். வருவது வரட்டும் என்று முடிவு செய்து கொண்டு நான் போனேன். அழகு மிளிர்கிற ஒரு இருபது வயதுக்காரி. அவள் கண்ணீரோடு ஒரு கதையைச் சொன்னாள். மனதை உருக்கும் ஒரு காதல்கதை. அது என்னை மிகவும் பாதித்துவிட்டது. அவளுடைய காதலன் அவளை வஞ்சித்து விட்டான். அவன் அந்தக் கன்னிப்பெண்ணை கர்ப்பிணியாக்கிய பின்பு காந்தியசோசலிஸ்டாக மாறி விட்டான். அவளுடைய வாழ்வுத் துன்பத்தை நான் ஒரு கதையாக்க வேண்டும். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உணர்ச்சிமிக்க மொழியில் அனைவரையும் ஈர்க்கக் கூடிய சித்தரிப்பாக இருக்கவேண்டும். அவள் ஒரு நல்ல வாசகியாக இருந்தாள். நான் அவளுடைய ஆத்மகதையை ஒரு கதையாக்கி அந்த வஞ்சகனுக்கு ஒரு நல்ல பாடம் கற்பித்தால் அவள் ஆசை நிறைவேறிவிடும். ஜென்மசாபல்யமடைவாள். புகார் செய்ய வேண்டும் என்றல்ல. அவமானப்படுத்த வேண்டும் என்றல்ல. நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றல்ல. ஒரு கதை எழுத வேண்டும். இது தான் அவளுக்குத் தேவை. அதன் பிறகு ஒரு நாற்பது நாற்பத்தைந்து நாட்கள் கழித்து அவள் தற்கொலை செய்து கொண்டாள்.
நன்றி- கிரந்தாலோகம் மார்ச் 1950
பொன்குன்னம் வர்க்கி
தமிழில்- உதயசங்கர்
நான் ஒரு எழுத்தாளனா? இது நான் பலசமயம் என்னுடைய மனசாட்சியிடம் கேட்கிற ஒரு கேள்வி. இதற்குப் பதில் சொல்வதற்கான முழு அதிகாரம் நிறையப்பேர்களுக்கு இருப்பதால் நான் அவர்களை நெருங்குவதற்குத் தயாரானேன். என்னுடைய அழைப்பில்லாமலே வரக்கூடிய ஏராளமான பதில்களுக்கு நான் விலை கொடுத்திருக்கிறேன். அவற்றில் சில அநுபவங்களைத் தான் இங்கே நான் தெளிவுபடுத்த ஆசைப்படுகிறேன். என்னுடைய கதைகளைப் பற்றி எனக்கு ஆத்மநம்பிக்கை தந்த அநுபவங்கள் அவை.
மீனச்சில் தாலுக்காவில் ஓரிடத்தில் ஒரு கயிறு விற்கும் கடையின் பின்னாலுள்ள சிறிய ஒரு அறையிலிருந்து கொண்டு நான் கதை எழுதிக் கொண்டிருப்பேன். தடியனான ஒரு ஆள் வந்து நின்றான். நிலையில் கைகளை ஊன்றிக் கொண்டு சரிந்து தாழ்கிற தலையோடு அவன் ஏதோ சொன்னான். தனிமையில் அகப்பட்டிருந்த என்னுடைய மனமோ, செவிகளோ, அதைக் கவனிக்கவில்லை.
“ டேய் போதும் என்ன? “ என்று கத்தினான்.
” போ………வனே..நீ கதை எழுதுகிறவனாடா? “
போதையின் உச்சத்தினால் அவனுடைய தலை நேராக நிற்கவில்லை. ஆனால் அந்தச் சிவந்தகண்களிலிருந்து வெறுப்பை வெளிப்படுத்திக் கொண்டே அவன் தொடர்ந்து கேட்டான்,
“ நீ சோகேனின் மகனாடா? “
ஆள் தெரியாமல் தவறாகப் பேசுகிறானோ. நான் சந்தேகப்பட்டேன். அந்த மனிதனை எப்போதோ பார்த்திருக்கிறேன். அவ்வளவு தான். நான் கேட்டேன்,
“ எங்கிட்ட தான் பேசுறீங்களா? “
“ பின்ன யாரிட்டடா உங்கப்பங்கிட்டயா.”
என்று அவனும் கேட்டான். எனக்கு வியர்த்து விட்டது. கள்ளு குடிக்காமலேயே என்னுடைய தலை பம்பரம் போலச் சுற்றிக் கொண்டிருந்தது. தலையைப் பிடித்துக் கொண்டே நான் மேசையின் மீது சாய்ந்தேன். இந்த நேரத்தில் அங்கே ஆட்கள் சிலர் வந்தனர். அவர்கள் அவனை என்னுடைய அறைக்கு முன்னாலிருந்து தள்ளிக் கொண்டுபோக முயற்சி செய்தனர்.
அவனைத் தூரமாய் கொண்டுபோய் விட்ட பின்பு சிலர் என்னிடம் என்ன காரணம் என்று கேட்டனர். எனக்கும் அது தான் தெரியவில்லை.
“ நீ கதை எழுதுவாய் இல்லையாடா? “ என்று கேட்டதன் ரகசியமும் புரியவில்லை. கொஞ்சநாட்களுக்கப்புறம் அவன் என்னுடைய சிநேகிதனாகி விட்டான். அந்த மனிதனிடமிருந்து முன்பு அவன் அப்படி நடந்ததற்கு என்ன காரணம் என்ற ரகசியத்தைப் புரிந்து கொண்டேன். பிரபலமான ஒரு புரோகிதர் தான் அவனை என்னிடம் அனுப்பியது. கள்ளு குடிக்க ஐந்து ரூபாய் கொடுத்து,
“ அவனை அவமானப்படுத்த வேண்டும்.. எழுதறதுக்காக ரெண்டடி கொடுக்கவேண்டும் “
என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். காரணம் நான் வைதீகர்களைப் பற்றிக் கதையெழுதியது தான்.
ஒரு தடவை ஒரு பெண் என்னுடைய பெயருக்கு ஒரு கடிதம் அனுப்பி அவள் என்னை ஒரு தடவை பார்க்கவேண்டும் என்று எழுதியிருந்தாள். வருவது வரட்டும் என்று முடிவு செய்து கொண்டு நான் போனேன். அழகு மிளிர்கிற ஒரு இருபது வயதுக்காரி. அவள் கண்ணீரோடு ஒரு கதையைச் சொன்னாள். மனதை உருக்கும் ஒரு காதல்கதை. அது என்னை மிகவும் பாதித்துவிட்டது. அவளுடைய காதலன் அவளை வஞ்சித்து விட்டான். அவன் அந்தக் கன்னிப்பெண்ணை கர்ப்பிணியாக்கிய பின்பு காந்தியசோசலிஸ்டாக மாறி விட்டான். அவளுடைய வாழ்வுத் துன்பத்தை நான் ஒரு கதையாக்க வேண்டும். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உணர்ச்சிமிக்க மொழியில் அனைவரையும் ஈர்க்கக் கூடிய சித்தரிப்பாக இருக்கவேண்டும். அவள் ஒரு நல்ல வாசகியாக இருந்தாள். நான் அவளுடைய ஆத்மகதையை ஒரு கதையாக்கி அந்த வஞ்சகனுக்கு ஒரு நல்ல பாடம் கற்பித்தால் அவள் ஆசை நிறைவேறிவிடும். ஜென்மசாபல்யமடைவாள். புகார் செய்ய வேண்டும் என்றல்ல. அவமானப்படுத்த வேண்டும் என்றல்ல. நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றல்ல. ஒரு கதை எழுத வேண்டும். இது தான் அவளுக்குத் தேவை. அதன் பிறகு ஒரு நாற்பது நாற்பத்தைந்து நாட்கள் கழித்து அவள் தற்கொலை செய்து கொண்டாள்.
நன்றி- கிரந்தாலோகம் மார்ச் 1950
அருமை.
ReplyDeleteநன்றி.