Sunday 17 June 2012

கர்வம்

உதயசங்கர்

vangoh

எந்தப் புத்தகத்திலிருந்தோ எழுந்து

என் கூடவே வந்து விட்டாள் அவள்

எந்தப் புத்தகம் என்பது மறந்தும் விட்டது

அவள் பெயரும் கூட தெரியவில்லை

அவள் வயதும் நான் அறியவில்லை

எப்படி வந்தாள் என்ற கேள்விக்குப்

பதிலே இல்லை

எழுதியவனைப் பிடிக்கவில்லையா?

எழுத்தைத் தாண்டி வளர்ந்து விட்டாயா?

எழுத்தில் வாழ விருப்பமில்லையா?

எந்தக் கேள்விக்கும் பதிலில்லை

என்னுடன் உண்டு உறங்கி குடும்பம் நடத்தினாள்

கர்வம் தன் படமெடுக்கத் தலைகுழம்பிக்

கேட்டு வைத்தேன் ஒருநாள்

என்னை உனக்குப் பிடித்திருக்கிறதா?

கேள்வியின் ஒலிச்சப்தம் தேய்ந்த

அக்கணம் மறைந்தாள்.

No comments:

Post a Comment