Sunday 29 July 2012

வசீகரம்

உதயசங்கர்

 

வசீகரம் ஒரு வானமாய் என் அறைக்குள்

உட்கார்ந்திருந்ததுblack,and,white,drawing,face,girl,art,woman-a8619ec48f601bdb6c57c8a2d15adca9_h_large

நான் ஒரு துளி நீருக்காய் நீட்டிக் கொண்டிருக்கிறேன்

என் நாவை

வசீகரம் ஒரு விருட்சமென என் வாழ்வில்

வேரோடியது

என் பசி தீர ஒரு சிறு கனிக்காகத்

தவமிருக்கிறேன்.

வசீகரம் ஒரு மலையைப் போல என் மனதில்

ஆக்கிரமித்தது

ஒரு சிறு செடியையேனும் அதில் காண

ஆவல் நான் கொண்டேன்.

வசீகரம் ஒரு பெண்ணைப் போல என் படுக்கையில்

சயனித்திருந்தது

ஒரு முத்தத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.

வசீகரம் தெருமுக்கில் ஒரு மரணத்தைப் போல

காத்துக் கொண்டிருந்தது

நான் ஒரு சிகரெட் புகைக்க தெருவில் இறங்கி

நடந்து போய்க் கொண்டிருக்கிறேன்.

1 comment: