Thursday 6 September 2012

உடலின் சொற்கள்

உதயசங்கர்

play

உயிருள்ள ஒவ்வொரு உடலும் பேசுகிறது. எப்போதும் பேசிக்கொண்டேயிருக்கிறது. அதன் மொழி பலருக்குப் புரியவில்லை. புரியவில்லையே என்ற கவலையும் இல்லை. அதனால் அதன் வார்த்தைகளின் அர்த்தம் தெரியவில்லை. அதனால் அதை அலட்சியம் செய்கின்றனர். அப்படியொன்றும் யாருக்கும் புரியாத மொழியில் உடல் பேசுவதில்லை. ஆனால் நாம் அந்த மொழி மருத்துவருக்கு மட்டுமே தெரியும் என்று நினைக்கிறோம். அதனால் மீண்டும் மீண்டும் நம்முடைய உடல் கதறியும் கேட்காமல் மருத்துவர் எழுதித் தரும் மருந்துகளை உட்கொண்டு உடலும், உயிரும் பாதிக்க, ஆண்டி பயாட்டிக்குகளையும், வலி நிவாரணிகளையும், ஆண்டி செப்டிக்குகளையும், இன்னும் சில சமயங்களில் ஸ்டிராய்டுகளையும் உட்கொள்கிறோம். ஏனெனில் நாம் அவசரமாக வாழ்கிறோம். அவசரத்தில் வாழ்கிறோம். அதனால் நம் உடலின் சொற்களைக் கேட்பதற்கு அவகாசமில்லை. நம்முடைய குழந்தைகளையும் அவ்வாறே பழக்குகிறோம். தூங்கியும் தூங்காமலும் காலை ஆறு மணிக்கு எழுப்பி ஏழு மணிக்குள் எல்லாகாலைக்கடன்களையும் முடித்து குளித்து சாப்பிட்டு ஏழு ஏழரை மணிக்கு ஸ்கூல் வேனுக்குள்ளோ, ஆட்டோவுக்குள்ளோ, ஸ்கூல் பஸ்ஸிலோ, திணித்து அனுப்பி விடுகிறோம். மாலையில் குழந்தை வந்ததும் ஸ்கூல் ஹோம் ஒர்க், படிப்பு, பின்னர் தூங்கிக் கொண்டே உணவு, அப்படியே உறக்கம். மறுபடியும் காலை ஆறு மணிக்கு எழுந்திரிக்க வேண்டும். இயந்திரமாய் நாமும் மாறி குழந்தைகளையும் இயந்திரமாய் மாற்றுகிறோம். பின்பு சலித்துக் கொள்ளவும் செய்கிறோம். என்ன படிச்சு என்ன செய்ய ஃபர்ஸ்ட் ரேங்க் வரமாட்டேங்கானே, எப்ப பாரு செகண்ட் ரேங்க், இல்லன்னா தேர்டு ரேங்க், காலையில ஒரு அஞ்சு மணிக்கு எந்திரிச்சிப் படிச்சான்னா அடுத்த பரீட்சையிலயாவது ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கலாம், மெமரி பிளஸ் டானிக் வாங்கிக் கொடுக்கணும், இந்த மாதிரியான உரையாடல்களை எங்கும் கேட்கலாம். இதெல்லாம் மூன்று, நான்கு வயது குழந்தைகளைப் பற்றி என்று நினைக்கும் போது நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்றே தெரியவில்லை.

மூன்று வயதுக்கு முன்னால் மட்டும் என்னவாம்? குழந்தைகளைப் பற்றி அவர்களுடைய உடல் மொழியைப் பற்றி என்ன தெரியும் நமக்கு. கொடுத்த உணவு ஒவ்வாததினால் உடல் அந்த ஒவ்வாத உணவின் ஒரு துளியும் உள்ளே தங்கி விடக்கூடாதென்று முயற்சிக்கிறது. ஏனெனில் உள்ளே தங்கி விடும் அந்த உடலுக்கு ஒவ்வாத உணவு விஷமாகி விடும் ஆபத்து இருக்கிறது என்பதை உணர்ந்தே உடலும், உடலின் செயல்களை ஒருங்கிணைக்கும் உயிராற்றலும் மிக விரைவாக செயல்படுகிறது. வயிற்றைச் சுத்தம் செய்ய வயிற்றாலை என்ற அறிகுறியை உருவாக்குகிறது. இந்த வயிற்றாலை என்ற அறிகுறி தான் உடலின் எச்சரிக்கை. இனி இந்த மாதிரி கெட்டுப்போன, ஒவ்வாத உணவைச் சாப்பிடக்கூடாது என்று சொல்லும் உடல்மொழி. ஒரு நாலைந்து முறை வயிற்றாலை போனால் போதும் உடனே தூக்கிக் கொண்டு மருத்துவரிடம் செல்ல அவர் அவருக்குத் தெரிந்த மருத்துவமொழியில் ( அதுவும் யாருக்கும் புரியாது) மலச்சிக்கலை உருவாக்கும் மருந்தை எழுதிக் கொடுத்து வயிற்றாலையை நிறுத்துகிறார். இப்போது குழந்தையின் வயிற்றாலை நோய் சரியாகி விட்டது. பெற்றோர்களுக்குச் சந்தோஷம். ஆனால் இப்போது குழந்தை சரியாகச் சாப்பிடவில்லை. வெளியே போய் நான்கு நாட்களாகி விட்டது. குழந்தையின் சுறுசுறுப்பு குறைந்து விட்டது. தூக்கு மறுபடியும் மருத்துவரிடம். இப்போது மருத்துவர் குழந்தை வெளியே போவதற்காக மலமிளக்கியையும், பசித்துச் சாப்பிட டானிக்குகளையும் எழுதிக் கொடுக்கிறார். சிரத்தையுடன் பெற்றோர் அதை வாங்கிக் கொடுக்கிறார்கள். பெற்றோர்கள் தங்களுடைய அறியாமையினால் குழந்தைக்கு தேவையில்லாத மருந்துகளை கொடுத்து அதன் உடலியக்கத்தில் ஊறு விளைவித்து ஒவ்வாத உணவின் விஷம் உடலில் தங்கி விடும்படி செய்து விட்டார்கள். மருத்துவரும் பணம் சம்பாதித்துக் கொண்டார்.

அப்படியானால் என்ன செய்ய வேண்டும். வயிற்றாலை போவதற்கு ஒவ்வாத உணவு தான் காரணமென்றால் நாலைந்து முறை தண்ணீராய் வெளியே போவதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. உடலில் நீர்ச்சத்து குறையாமலிருக்க உப்பும் சர்க்கரையும் கலந்த நீரும் எளிய உணவும் ஓய்வும் போதுமானது. உயிராற்றல் தனக்கு ஏற்பட்ட பாதிப்பைத் தானே சரி செய்து கொள்ளும். மீண்டும் உடல் முழு ஆரோக்கியத்தோடு புத்துணர்ச்சி பெற்று விடும். இல்லையெனில் ஒத்த மருந்தின் விதிப்படி நலமாக்கலை உருவாக்கும் ஹோமியோபதியில் நலம் பெறலாம். குழந்தைகளுக்கு வருகின்ற பெரும்பாலான நோய்கள், செயற்கையான டப்பா உணவுப்பொருட்கள், சாக்லேட், பிஸ்கட்டுகள், நம்முடைய சீதோஷ்ணநிலைக்கு ஒவ்வாத ஆடைகள், உடலின் வளர்ச்சிப்போக்கில் ஏற்படும் சிறு சிறு உபாதைகள், இவற்றில் பல உபாதைகள் மருத்துவமனைக்குச் செல்லாமலே குணமாகி விடக்கூடியவை தான். செயற்கையான டப்பா உணவுப்பொருட்களில் அது கெட்டுப்போய் விடாமலிருப்பதற்காக கலந்திருக்கும் வேதியல் பொருட்கள் குழந்தையின் நலத்தை பாதிக்கும். மாவுப்பொருள் மட்டுமேயான பிஸ்கெட்டுகள் மலத்தை இறுக்கும். சாக்லேட்டுகளில் உள்ள கொக்கோ அதிக அளவில் உடலில் சேரும்போது பற்களில் சொத்தையும், வயிற்றில் புழுக்களும் வளர ஏதுவாகும். அது மட்டுமல்ல அதிகமாகச் சாக்லேட் தின்னும் குழந்தைகளுக்கு பிடிவாதகுணமும் அதிகமாகும்.

பெரியவர்களுக்கும் கூட பொருந்தக்கூடியவை தான். நம்முடைய உணவுப்பழக்கவழக்கங்களில் கடந்த முப்பது ஆண்டுகளுக்குள் ஏற்பட்ட தலைகீழ் மாற்றமே இன்று சர்க்கரைநோய், புற்றுநோய், இருதயத்தாக்கு, ரத்தக்கொதிப்பு, போன்ற நோய்கள் அதிகமாகிக் கொண்டே வருவதற்குக் காரணம். லாபம் ஒன்றே குறி என்ற முதலாளித்துவ சிந்தனை விவாசாயம் தொடங்கி பரவலாக எல்லா உற்பத்திப்பொருட்களின் சூட்சுமமாகி விட்டது. பொதுநலத்தின் எல்லைகள் சுருங்கி சுயநலத்தின் வெளி விரிந்து கொண்டேயிருக்கிறது. அதனால் மருத்துவமனைகளும் ஸ்பெஷலிஸ்டுகளும் பெருகி வருகிறார்கள். உடலை ஒரு இயந்திரமாகப் பார்க்கிற ஸ்பெஷலிஸ்டுகள், ஹார்ட் ஸ்பெஷலிஸ்டுகள், ஸ்கின் ஸ்பெஷலிஸ்டுகள், கிட்னி ஸ்பெஷலிஸ்டுகள், குடல் ஸ்பெஷலிஸ்டுகள், கைகால் ஸ்பெஷலிஸ்டுகள், நரம்பு ஸ்பெஷலிஸ்டுகள், மனநல ஸ்பெஷலிஸ்டுகள், நுரையீரல் ஸ்பெஷலிஸ்டுகள், பின்னர் இருக்கவே இருக்கிறார்கள் கண், காது,மூக்கு,தொண்டை, பல் ஸ்பெஷலிஸ்டுகள், கிட்டத்தட்ட நமது உடலை ஸ்பேர்பார்ட்ஸ் கடையாக மாற்றி விட்டிருக்கிறார்கள். மனிதனை முழுமையாக உடலும், மனமும் சேர்ந்த, உயிராற்றல் மிக்க ஒரு உயிராக ஆங்கில மருத்துவம் பார்ப்பதில்லை.

ஆனால் எப்போதெல்லாம் நமது உயிராற்றல் பாதிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அது உடலின் வழியாகப் பேசுகிறது. ஒரு இடத்தில் அடி பட்டால் வலி என்ற உணர்வை ஏற்படுத்தி நம்முடைய உடலின் பாதுகாப்புமையத்துக்கு அவசர உதவி கேட்டு செய்திகள் பறக்கின்றன. அடிபட்ட இடத்தில் சிதைந்த செல்களையும், இறந்த திசுக்களையும் வெளியேற்ற வேண்டும். லேசாக ரிப்பேர் ஆன செல்களைச் சரி செய்ய வேண்டும். என்ன செய்யலாம்? அடி பட்ட இடம் அப்படியே எந்த மாற்றமுமின்றி இருக்க முடியுமா? அப்படி இருந்தால் நாம் ஓய்வு எடுப்போமா? அதனால் அந்த இடம் வீங்குகிறது. வலி என்ற உணர்வு நீடிப்பதன் மூலம் அடிபட்டவரை அசையாமல் இருக்க வைக்கிறது. பாதுகாப்புப்படை தங்களுடைய மருத்துவ அணியுடன் சென்று தங்களுடைய வேலை முழுமையாக நடப்பதற்காக, உடலின் உஷ்ணத்தை அதிகப்படுத்துகிறது. அடிபட்ட இடம், அடியின் ஆழம் அடிபட்டவரின் ஆரோக்கியம் இவற்றைப் பொறுத்து காயமோ, வீக்கமோ ஆறுகிறது. இறந்த செல்களும் திசுக்களும் சீழாக வெளியேறும். அந்த இடத்த்தில் புதிய செல்களும், திசுக்களும் உருவான பிறகு முதலில் கரடு முரடான பூச்சு போல மேல் பொருக்கு உருவாகி கீழே உள்ள புண்ணைப் பாதுகாக்கும். கீழே உள்ள புண் ஆறியதும் பட்டுத்துணி போல காயம் தழும்பாக மாறி விடும். இதையெல்லாம் நம் உடலின் மருத்துவரே எந்த மருத்துவப்படிப்பும் படிக்காமலேயே செய்கிறார். அவருக்குத் தெரியும் எந்தக்காயம் அவரால் ஆற்றக் கூடியது. எதற்கு வெளியிலிருந்து உதவி தேவைப்படும் என்று. அதற்குத் தகுந்த மாதிரி அவர் உடலை இயக்குவார். அதேபோல காய்ச்சலோ தலைவலியோ நோய்களல்ல உடலின் பாதுகாப்புப்படையின் தரும் சமிக்ஞைகள். அதாவது சிக்னல்கள். அந்த சிக்னல்களைப் புரிந்து கொண்டு எதன் காரணமாகத் தலைவலி வந்ததோ அதற்கு மருத்துவம் பார்க்க வேண்டும். அதை விட்டு விட்டு வெறும் தலைவலிக்கும், காய்ச்சலுக்கும் மருந்து சாப்பிட்டுக் கொண்டேயிருந்தால் அது தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

எல்லா உடல் உபாதைகளுக்கும் காரணம் இருக்கும். பிறவியில் ஏற்படும் நோய்களைத் தவிர தீவிர நோய்கள் என்று சொல்லக் கூடிய அவ்வப்போது வந்து போகக்கூடிய நோய்களுக்குக் காரணம் இருக்கும். உதாரணத்துக்கு நல்ல கோடைகாலத்தில் தங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக காற்றோட்டமில்லாத செயற்கை நூலிழைகளில் தயாரிக்கப்பட்ட இறுக்கமான சட்டையை தாங்கள் வெளியே செல்லும்போது குழந்தைக்கு அணிவிக்கிறார்கள். குழந்தை வெப்பம் தாங்கமுடியாமல் வீரிடுகிறது. ஆனால் பெற்றோருக்குப் புரிவதில்லை. அழ அழ அந்தக் குழந்தையோடு மல்லுக்கட்டி வெளியே போய் விட்டு வீட்டிற்கு வந்து சட்டையைக் கழட்டிப் பார்த்தால் உடலெங்கும் திட்டு திட்டாய் கன்னிப் போயிருக்கிறது. உடனே மருத்துவரிடம் கொண்டு செல்கிறார்கள். அவர் கொடுக்கும் மருந்துகளை குழந்தைக்குக் கொடுக்கிறார்கள். அன்றிலிருந்து குழந்தைக்கு சிறிதளவு வெப்பத்தையும் தாள முடியாமல் உடல் உபாதையால் துன்பப்படுகிறது. ஒவ்வொரு முறையும் மருத்துவரிடம் செல்ல நேரிடுகிறது. குழந்தையின் உடல்மொழியை பெற்றோர் அறிந்திருந்தால் குழந்தைக்கு இத்தகைய துன்பம் நேரிடுமா?

குழந்தையின் உடல் நலத்தின் மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் அவர்களுக்கு அடிக்கடி மருந்துகளைக் கொடுக்காமலிருப்பது நல்லது. சின்னச் சின்ன தானாகவே சரியாகிவிடும் உடல் உபாதைகளுக்கெல்லாம் மருத்துவர், மருந்து என்று பழக்கப்படுத்துவதினால் இரண்டு விதமான பாதிப்புகள் நேரலாம். உடலின் இயற்கையான பாதுகாப்புபடையிலும், உடல் மருத்துவரையும் வெளியிலிருந்து தொடர்ந்து உடலுக்குள் வந்து கொண்டேயிருக்கும் மருந்துகள் ஊனப்படுத்திவிடும். ஊக்கமுடன் செயல்பட விடாமல் எப்போதும் வெளியிலிருந்து உதவியை எதிர்பார்க்கும் நிலைமையை உருவாக்கி விடும். அதாவது இயற்கையான நோயெதிர்ப்புசக்தி குன்றி விடும். இதனுடைய இன்னொரு விளைவு குழந்தை தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொண்டேயிருக்கும்போது மனதளவிலும் பாதிக்கப்படும். ஒருவிதமான மருந்தடிமையாக மாறி விடும் அபாயமும் உள்ளது. தான் ஒரு நிரந்தரமான நோயாளி என்றும் எப்போதும் மருந்துகள் எடுத்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்றும் தோன்றி விடும். எந்தச் சிறிய உடல் உபாதைகளையும் தாங்கிக் கொள்ளும் மனவலிமை இல்லாமல் போகும்.

எனவே பெற்றோர்களுக்கு எது நோய்? எது நலம்? எந்த நோய்க்கு மருத்துவரை அணுக வேண்டும்? எந்த நோய்க்கு மருந்துகள் எடுக்க வேண்டும்? எந்ததெந்த உடல் உபாதைகளுக்கு மருத்துவரோ, மருந்துகளோ தேவையில்லை என்ற ஞானம் வேண்டும். அப்போது தான் எதற்கெடுத்தாலும் மருத்துவமனையை நோக்கி எடுக்கும் படையெடுப்பை நிறுத்த முடியும். குழந்தைகளும் மருந்துகளின் டானிக்குகளின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவார்கள். இயற்கையான நலமுள்ள குழந்தைகளாக வளருவார்கள்.

Photo-0011_e1

4 comments:

  1. நன்றி திரு உதயசங்கர். உடல் நலத்தைப் பற்றிய ஒரு முழுமையான பதிவு. நமக்கு எல்லாவற்றிலும் அவசரம்.
    இந்த அருமையான பதிவை எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். படித்துப் பாருங்கள் நண்பர்களே.

    ReplyDelete
  2. குழந்தைகள்ளுக்கு தடுப்பூசி போடுவதைப்பற்றி தங்கள் கருத்தென்ன. ஹோமியோபதி எவ்வாறு குழந்தைகளுக்கான நோயேதிருப்பு தரனை மேம்படுத்துகிறது.தங்களின் மேலான பின்னுட்டத்தை எதிபர்கிறேன்.ஏனெனினில் எனது குழந்தைக்கு (45 நாள் )வரும் சனிக்கிழமை தடுப்பூசி போட செல்கிறோம்.பலரும் போட வேண்டாம் என்கிறார்கள்
    நன்றி
    --

    ReplyDelete
    Replies
    1. குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடத் தேவையில்லை. சிறு பிராயத்திலிருந்தே நீங்கள் உங்கள் குழந்தைக்கு ஹோமியோ மருத்துவச்சிகிச்சை எடுத்து வந்தாலே குழந்தையின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கும். குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் ஹோமியோமருந்துகள் ஒவ்வொரு உடலிலும் உள்ள நோய் எதிர்ப்புத் திறனை வலுவுள்ளதாக்குகிறது. அது மட்டுமல்ல நோய்த் தடுப்பு மருந்துகளும் ஹோமியோவில் உள்ளது. ஆபத்தில்லாதது. பக்கவிளைவுகளற்றது.

      Delete