உதயசங்கர்
வெயில் பொழியும் என் முற்றம்
நீருக்காய் வாய் தவிக்கும் தவிட்டுக்குருவி
என் சன்னல் வழி மேகம் வந்து
என்னை எழுப்பியது
நீரும் உணவும் வைத்திருக்கிறேன்
இருக்கின்ற இடத்தை விட்டு
எல்லா இடங்களிலும் தத்தித் தாவுகிறாய்
நிழல் தேடி அலைகிறாய்
பயப்படத் தேவையில்லை
நானும் வேடனில்லை
என் அன்பு ஒரு துளி தான்
ஆனாலும் அது என் அன்பு
வேறு யாருடையதைப் போலுமில்லாத
என் அன்பை ருசித்துப் பார்
என் உயிரின் சுவை தெரியும்.
வணக்கம் உறவே
ReplyDeleteஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/
முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.
5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.
உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி
வலையகம்
http://www.valaiyakam.com/
வாசித்தேன். ஹோம் பேஜ் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ReplyDeleteஅருமையான கவிதை ஐயா !!! உயிர்கள் மீதான அன்பை வெளிக்காட்டியும், மனித மனத்தின் யதார்த்த உணர்வை உணர்த்துகின்ற கவிதை .. !!!
ReplyDeleteஅழகு கவிதை.
ReplyDeleteவாழ்த்துகள்.