முதலில் குழந்தைகளிடம் இவற்றைக் கேட்காதீர்கள்.
பெரியவர்களுக்கு எண்களை மிகவும் பிடிக்கும். அவர்கள் இந்த உலகத்தை எண்களால் மட்டுமே புரிந்து கொள்கிறார்கள்
ஆனால் கண்களால் பார்க்க முடியாத முக்கியமானவற்றை இதயத்தால் பார்க்க முடியும் என்பதை மறந்து விடுகிறார்கள். -- அந்துவான் எக்ஸ்பரி (குட்டி இளவரசன்)
புதிதாக நீங்கள் சந்திக்கும் குழந்தைகளிடம் இவற்றைக் கேட்காதீர்கள்
1. குழந்தைகளிடம் அவர்கள் என்ன வகுப்பு படிக்கிறார்கள் என்று கேட்காதீர்கள்
2. குழந்தைகளிடம் அவர்கள் எப்படி படிக்கிறார்கள் என்று கேட்காதீர்கள்
3. குழந்தைகளிடம் மதிப்பெண் பற்றி கேட்காதீர்கள்
4. குழந்தைகளிடம் ரேங்க் என்ன என்று கேட்காதீர்கள்
5. குழந்தைகளிடம் அவர்களுடைய நண்பர்கள் என்ன ரேங்க் எடுப்பார்கள் என்று கேட்காதீர்கள்
6. குழந்தைகளிடம் வீட்டுப்பாடம் எழுதி முடித்து விட்டாயா என்று கேட்காதீர்கள்
7. நாளை வகுப்பில் பரீட்சை உண்டா என்று கேட்காதீர்கள்
8. பரீட்சைக்கு எல்லாவற்றையும் படித்து விட்டாயா என்று கேட்காதீர்கள்
9. அவனைப் போல் இவனைப் போல் படிக்க வேண்டாமா என்று கேட்காதீர்கள்
10. நீ டாக்டராக வேண்டாமா இன்ஜினியராக வேண்டாமா கலெக்டராக வேண்டாமா என்று கேட்காதீர்கள்.
11. உன்னுடைய அப்பா என்ன வேலை பார்க்கிறார்? எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று கேட்காதீர்கள்?
12. எண்களால் மட்டும் உருவானதில்லை இந்த உலகம்.
13. இந்தக் கேள்விகளைத் தவிர குழந்தைகளிடம் வேறு என்ன கேட்பது?
அடுத்த பதிவில்..
No comments:
Post a Comment