Friday 23 March 2012

வருக!

Josies-beach-calm-sea

அமைதியானது
ஆழமில்லாதது என் கடல்
ஆழிப்பேரலை அல்ல
ஓடிவிளையாடும் குழந்தையின்
பாதங்களைத் தொட்டுச் சிரிக்கும்
மெல்லலை வீசும் கடல்
கப்பல்கள் வரலாம் படகுகளும்
வல்லங்களும்
ஏன் தூண்டில்காரருக்கும் கூட
வேண்டிய மட்டும் கிடைக்கும் மீன்கள்
காதலர்கள் களிக்க
கவிஞர்கள் கவியெழுத
சும்மாவேனும் காற்று வாங்க
எல்லோரும் வந்தமர
இடமிருக்கிறது என் கடற்கரையில்
நீச்சல் தெரியாதவர்களும்
கடலில் இறங்கலாம்
ஆழம் பெரிதொன்றுமில்லை
அவரவர் முழங்கால் அளவேயாதலால்
தற்கொலை நிகழாக் கடல்
ஆண்கள் பெண்கள் குழந்தைகள் பெரியவர்
கூடிக் குளிக்கும் கடல்
அமைதியானது
ஆழமில்லாதது என் கடல்
வருக யாவரும்
வாழ்வில் ஒருமுறையேனும்
அப்புறம்
அறியும் பாக்கியம் எல்லோருக்கும் இல்லை.

8 comments:

  1. "ஓய்வில்லாத கடல் பேரிரைச்சல் இடுகிறது. எல்லையற்ற வார்த்தைகளின் கடற்கரையில் குழந்தைகள் ஆரவாரத்துடன் சந்திக்கின்றனர்." மகாகவி தாகூரின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன. குழந்தைகளின் ஆரவாரத்துடன் சந்திப்போம். கடல் ஓய்வில்லாமல் அலைபாயட்டும்.

    வலையுலகம் ஒரு கடல்தான். வரவற்கிறேன் என் இனிய தோழா!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாது! எங்கள் வலையுலக முன்னோடியே உங்களை வணங்குகிறேன்.

      Delete
  2. நல்ல கவிதையோடு
    ஆரம்பித்ததற்கு நன்றி
    தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு வழியாய் வந்து விட்டாய்..தொடர்ந்து எழுது என் இனிய நண்பனே ..ஒரு பெரிய நட்பு வட்டம் உனக்கு காத்திருக்கிறது , உனது படைப்புகளை உள்வாங்க ..

      நாறும்பூநாதன்

      Delete