Tuesday 4 June 2019

மொழியும் இனமும்

மொழியும் இனமும்

1. மொழி ஒரு இனத்தின் ஆன்மா.
2. மொழியின் மூலமே ஒரு இனம் தன்னை அடையாளம் காண்கிறது.
3. மொழி வெறும் தகவல் தொடர்புக்கருவியல்ல. அது ஒரு பண்பாட்டின் ஆணிவேர்.
4. மொழி ஒரு இனத்தின் இரத்த ஓட்டம். அது ஓடிக்கொண்டிருக்கும் வரை தான் அந்த இனம் தனித்துவத்துடன் தன்னை நிலை நிறுத்தமுடியும்.
5. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அதன் மொழியை அழித்தால் போதுமானது.
6. எந்த ஒரு மொழியும் எந்த மொழிக்கும் எதிரியல்ல.
7. ஆனால் எந்தக்காரணத்தைக் கொண்டும் ஒரு மொழி இன்னொரு மொழி மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது.
8. ஒவ்வொரு மனிதனும் அவன் வாழ்வில் எத்தனை மொழிகளைக் கற்றாலும் தன்னுடைய தாய்மொழியின் வழியாகவே சிந்திக்கிறான்.
9. மொழியின் ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் அந்த இனத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு வரலாற்று விழுமியங்கள் இருக்கின்றன
10. தன்னுடைய மொழியை அழிந்து போகாமல் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு இனத்தின் கடமை.

No comments:

Post a Comment