Sunday 10 March 2013

புதிது

உதயசங்கர்

joisel-2

இன்று

அந்த மரத்தின் இலைகள்

உதிர்ந்து கொண்டிருக்கின்றன

மௌனமாய் இருக்கிறது மரம்

மௌனம் மரணமல்ல

தியானம்

நாளை

மீண்டும் அந்த மரத்தில்

புதிய இலைகள்

புதிய இலக்குகள்

புதிய லட்சியங்கள்

புதிய விடுதலை

புதிய பூக்கள்

புதிய மனிதர்கள்

புதிது புதிதாய் தோன்றவே.

1 comment: