Showing posts with label எம்.எம்.தீன். Show all posts
Showing posts with label எம்.எம்.தீன். Show all posts

Thursday, 17 December 2015

எம்.ஜி.ஆருடன் பேசிக்கொண்டிருக்கிறேன்


எம்.ஜி.ஆருடன் பேசிக்கொண்டிருக்கிறேன்-
நூல் அறிமுகம்


எம்.ஜி.ஆரோடு பேசிக்கொண்டிருக்கிறேன் என்ற சிறுகதை நூல் எம்.எம்.தீன் எழுதியது. நேற்று வாசித்தேன். முதல் சிறுகதைத்தொகுப்பு என்ற அடையாளமே இல்லை. 12 சிறுகதைகள். தேர்ந்த மொழிநடை. வழக்கமான கதை சொல்லல் முறையிலிருந்து வேறுபட்ட பாணி. மிக முக்கியமாக இந்தத் தொகுப்பில் வருகிற பெண்கள், ஆகா....பிரமாதம். கதைகளற்ற கதையில் நிழலாக வருகிற அம்மா, அவர் வருவாரா வில் வருகிற அமுதா, மௌன ஊஞ்சலில் வருகிற மாமி, ஒற்றைச்சிறகுவில் வருகிற சூடிப்பாட்டி, மிக அழகாக மனதுக்கு நெருக்கமாக உலவுகிறார்கள். மூன்று கதைகளைத் தவிர மற்ற கதைகளின் களம் சைவ, வைணவ, கிறித்துவ மரபு சார்ந்தது. இன்றைய காலகட்டத்தில் இதற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. அதோடு அந்த அநுபவங்களை இயல்பாக தீன் வெளிப்படுத்தியிருக்கிற விதம் அவரை ஒரு தேர்ந்த எழுத்தாளராகக் காட்டுகிறது. இந்தத் தொகுப்பின் மிகச்சிறந்த கதை ஆனப்பாத்தீ. அதில் வருகிற அபுசாலிம் தமிழ் இலக்கியத்துக்குக் கொடை. விசாரணை வளையம் மிக முக்கியமான கதை. கதைகளற்ற கதை, புன்னகை, எம்.ஜி.ஆரோடு பேசிக்கொண்டிருக்கிறேன், ஒற்றைச் சிறகு, ஆகிய கதைகள் மிக நல்ல கதைகளாகத் தொகுப்பில் உருவாகியிருக்கின்றன. மிக முக்கியமான சிறுகதை எழுத்தாளராக எம்.எம்.தீன் உருவாவதற்கான அத்தனை அம்சங்களும் இந்தத் தொகுப்பில் இருக்கிறது.
வாழ்த்துக்கள் எம்.எம்.தீன்!


உயிர்மை வெளியீடாக வெளிவந்துள்ள இந்த நூலின் விலை-110/-