யார்
அழகு?
உதயசங்கர்
அன்று
குருமலை காட்டில் திருவிழா. அந்தச் சிறிய காட்டில் உள்ள புள்ளிமான், மிளா, நரி, குள்ளநரி,
ஒலுங்கு, ஓணான், மரப்பல்லி, அணில், எலி, சாரைப்பாம்பு, நல்லபாம்பு, ராஜநாகம், கட்டுவிரியன்,
கண்ணாடி விரியன், பச்சைபாம்பு, மஞ்சள்விரியன், மண்ணுள்ளி பாம்பு, புறா, காட்டுக்கோழி,
கௌதாரி, காடை, மைனா, சிட்டுக்குருவி, தவிட்டுக்குருவி, கருங்குருவி, பனங்காடை, மரங்கொத்தி,
நீலச்சிட்டு, தேன்சிட்டு, மயில், கருங்குயில், புள்ளிக்குயில், என்று எல்லோரும் ஒன்று
கூடுவார்கள். வருடத்துக்கு ஒரு முறை இயற்கையைப் போற்றி வழிபடுவார்கள்.
அந்த
விழாவின் போது அங்கே கலை நிகழ்ச்சிகள் நடக்கும். பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, நடனம்,
ஓட்டப்பந்தயம், சடுகுடு, பாண்டி, கிளித்தட்டு, என்று எல்லாவிதமான நிகழ்ச்சிகளும் நடக்கும்.
அன்று முழுவதும் யாரும் யாருடனும் சண்டை போடக்கூடாது. யாரும் யாருக்கும் எதிரி இல்லை.
பாட்டுப்போட்டியில்
குயிலும், கிளியும், மைனாவும், போட்டி போட்டனர். குயில் ” குக்கூ குக்கூகுக்கூக்கூஊஊ
“ என்று பாடிக்கொண்டிருந்தது.
கிளி
“ கீகிகிகிகிக்கீக்கீக்கீ..” என்று கத்திக் கொண்டிருந்தது.
மைனா,”
கெக்கேக்கெக்க்கே..” என்று ராகம் பாடியது.
நடுவராக
இருந்த ஆந்தை தூக்கக்கலக்கத்தில் கண்ணை மூடி மூடித் திறந்து தலையாட்டிக் கொண்டிருந்தது.
ஆந்தையாரின் தலையாட்டலைப் பார்த்து குயிலும் கிளியும், மைனாவும், இன்னும் சத்தமாகப்
பாட ஆரம்பித்தன.
நடனப்போட்டிக்கு
நடுவராக நத்தை இருக்க, மயிலும், கோழியும், புறாவும், ஆடின.
“
ஏன் இப்படி கையையும் காலையும் உதறிக் கொண்டிருக்கிறார்கள்?”
என்று
நடுவர் நத்தை நினைத்தது. இப்படி காட்டின் பல பாகங்களிலும் வேறு வேறு போட்டிகள் நடந்து
கொண்டிருந்தன.
காட்டின்
நடுவே இருந்த ஒரு பெரிய ஆலமரத்தடியில் அழகுப் போட்டி நடந்து கொண்டிருந்தது. அழகுப்போட்டியின்
நடுவராக பருந்து உட்கார்ந்திருந்தது.
அழகுப்போட்டியில்
ஆண்மயில் தன் தோகை விரித்து ஒய்யாரமாக நடந்து வந்தது.
மயில்புறா
தலையில் கொண்டையும் பின்புறம் விரிந்த இறகுகளுமாய் நடந்து வந்தது.
சிட்டுக்குருவி
தத்தித்தத்தி நடந்து வந்தது.
கிளி
தலையைத் தலையை ஆட்டிக்கொண்டு ஒவ்வொரு அடியாய் அடியெடுத்து நடந்து வந்தது.
ஒவ்வொருவர்
நடந்து வரும்போதும் கைதட்டலும் சீட்டி ஒலியும் ஆரவாரமும் தூள் பறந்தது.
ஆமை
அன்னநடை போட்டு வந்தது.
நத்தை
தன்னுடைய சங்குமுதுகை ஆட்டிக் கொண்டே வந்தது.
முயல்
நீண்ட காதுகளை ஆட்டிக் கொண்டே துள்ளித் துள்ளி வந்தது.
நரி
வாலை சுருட்டிக் கொண்டே பம்மிப் பம்மி வந்தது.
பாம்பு
தலையைத்தூக்கி தன் படத்தைக் காட்டிக் கொண்டே வந்தது.
அணில்
தன்னுடைய சாமரவாலைத் தூக்கிக்கொண்டு விருட்டென்று ஓடியது.
காகம்
தலையைச் சாய்த்துச் சாய்த்து எல்லோரையும் பார்த்தபடி நடந்தது.
ஓணான்
தன்னுடைய இரண்டு கண்களையும் உருட்டியபடி தலையை ஆட்டிக்கொண்டே நடந்தது.
எறும்பு
யாரையும் கவனிக்காமல் விறுவிறுவென்று நடந்தது.
அழகுப்போட்டியின்
முடிவு அறிவிக்கும் நேரம் வந்தது.
நடுவராக
இருந்த பருந்து நீண்ட தன் சிறகுகளை விரித்து மடக்கியது. பின்னர் அலகுகளால் இறகுகளைக்
கோதி விட்டது. எல்லோரும் காத்திருந்தனர். பின்னர் மேடையில் அதுவே ஒரு நடை நடந்து பார்த்தது.
கரகரப்பும்
கீச்சுத்தன்மையும் கலந்த குரலில் தன்னுடைய தீர்ப்பை அறிவித்தது.
”
அழகுப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருமே அழகு. கலந்து கொள்ளாமல் வேடிக்கை பார்த்தவர்களும்
அழகு. இயற்கையின் படைப்பில் எல்லோருமே அழகு. “
உண்மை
தானே!
காட்டில்
ஒரே ஆரவாரம்!. கைத்தட்டல்!. சீட்டி ஒலி!.
5+
No comments:
Post a Comment