Tuesday 17 July 2012

குறையொன்றுமில்லை

உதயசங்கர்

 

அறைக்குள் வளர்ந்ததொரு தொட்டிச்செடிHydrangeas

தன் தலைக்குமேல் பூசிய வெளிர்நீலநிறத்தையே

காமுற்றது வானமென

நீர்த்தெளிப்பானால் நனைந்த வேர்நாவுகளால்

முயங்கியது தொட்டியின் மண்ணை

நிதமும் வண்ணமயமாய் பூத்து

சிரிக்க வைத்தது எஜமானனை

ஏறத்தாழ மகிழ்ச்சியின் சிகரத்தில்

வீற்றிருந்தது 

ஆனால் ஒருபோதும் ஒருவண்ணத்துப்பூச்சியோ

ஒரு தேன் சிட்டோ

தன் மீதேன் அமரவில்லை

என்று மட்டும் புரியவேயில்லை

மற்றபடி குறையொன்றுமில்லை.

1 comment: