Friday 13 July 2012

எப்படி வாழ்கிறாய்?

imagesCA20VS3S

உதயசங்கர்

 

உன் பிறந்த நாளன்று

ஒரு ரோஜாவையேனும் தந்ததில்லை

ஆனால் முட்களால் கீறியிருக்கிறேன்

உன் திருமணநாளன்று

ஒரு சாக்லேட் கூட கொடுத்ததில்லை

ஆனால் வெறுப்பின் கசப்பை

உமிழ்ந்திருக்கிறேன்

உன் ஆசைகளின் பதியன்களுக்கு

ஒரு நாளேனும் நீருற்றியதில்லை

ஆனால் மிதித்து நடந்திருக்கிறேன்

உன் கனவுகளின் வானவில்லை

கண்டு மகிழ்ந்ததில்லை

ஆனால் கலைத்து குழப்பியிருக்கிறேன்

உன் சிறகுகளின் யத்தனிப்பை

ஒரு நாளும் அவதானித்ததில்லை

ஆனால் வளரவிடாமல் வெட்டியிருக்கிறேன்

இத்தனை குரூரமான என்னுடன்

எப்படி வாழ்கிறாய் என் சகியே?

No comments:

Post a Comment