Thursday 2 August 2012

கனவு

உதயசங்கர்

Midsummer_s_Night_Dream

கனவில் ஒரு வானம் வந்தது

கனவில் ஒரு பூமி வந்தது

கனவில் ஒரு கானகம் வந்தது

கனவில் சில மிருகங்கள் வந்தன

கனவில் எண்ணிலா புட்கள் பறந்தன

கனவில் பல பூச்சிகள் இசைத்தன

கனவில் பல வண்ணங்கள் குழைந்தன

கனவில் எம் மக்கள் சிரித்தனர்

கனவில் ஒரு காதலியும் வந்தாள்

கனவில் ஒரு கனவும் வந்தது

கனவில் வந்த கனவுக்குச்

சிங்கப்பல் இருந்தது

அது என் கனவுகளின் கனவுகளைக்

காவிச் சென்றது.

No comments:

Post a Comment