Friday 6 April 2012

யதார்த்தம்

yatharththam


பெருமணல்வெளி


கொடுஞ்சூறைக்காற்று


ஒவ்வொரு அங்குலநிலத்திலும்


தண்ணீரின் தடம் தேடி


தவிக்கும் உயிர்


வழியெங்கும் தாகம் உறிஞ்சி


மீதமான மனிதச் சிதிலங்கள்


அதோ ஒரு சுனையின் கண்


உயிரைக் காலில் கட்டியிழுத்து


ஒவ்வொரு அடியாய் ஊர்ந்து


வெடித்த உதடுகளில்


உயிர் தவித்து நிற்க


சுனையில் ஊறிய கடைசிச் சொட்டும்


மரணமாக இருந்தால்


என்ன செய்வீர்கள் நீங்கள்

பாலைப் பிசாசாகிக் காத்திருக்கிறேன்




உங்களை எதிர்நோக்கி

4 comments: