இன்றிலிருந்து குழந்தைகளுடன் உரையாடுஙகள்!
1. குழந்தைகளுடன் உரையாடுவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். குறைந்தது ஒரு மணி நேரமாவது அவர்கள் சொல்வதை கேளுங்கள்.
2. எப்போதும் படிப்பு குறித்தும் அதை செய்யாதே இதை செய்யாதே என் என்று எதிர்மறையாக பேசாதீர்கள்.
3. குழந்தைகளை உரையாட விட்டு அவர்களுடைய குழந்தைமையை, கற்பனைத் திறனை, இந்த உலகம் பற்றிய கருத்துகளை உள்வாங்கி அனுபவியுங்கள்.
4. உங்கள் கருத்துகளையோ, நம்பிக்கைகளையோ, உங்களுக்கு தெரிந்த தகவல்களையோ, குழந்தைகளிடம் திணிக்காதீர்கள்.
5. அவர்களுக்கு மாதம் தோறும் ஒரு புத்தகமாவது வாங்கி க் கொடுங்கள் அதை அவர்களுடன் சேர்ந்து நீங்களும் வாசியுங்கள்.
6. குழந்தைகளுக்கென்று குட்டியான நூலகம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுங்கள். அதில் அவர்கள் பிரியமான விளையாட்டு பொம்மைகளையும் புத்தகங்களையும் வைத்துக் கொள்ளட்டும்.
7 . கதைகளை நீங்கள் வாசிக்கும் போதோ அல்லது சொல்லும்போதோ குழந்தைகளின் தலையீட்டை, கேள்விகளை, உற்சாகப்படுத்தி வரவேற்று உரையாடுங்கள்.
8. குழந்தைகளின் அத்தனை கேள்விகளுக்கும் ஐயா பொய்யாகவாவது பதில் சொல்லி விட வேண்டும் என்று நினைக்காதீர்கள். உங்களுக்கு தெரியாததை தெரிந்து கொண்டு வந்து சொல்கிறேன் என்று சொல்லுங்கள்.
9. குழந்தைகளிடமும் குழந்தைகள் முன்னாலும் பெரியவர்கள் தோற்றுப் போவதற்கு அச்சமோ வெட்கமோ படக்கூடாது.
10. குழந்தைகளிடம் உங்கள் முழுத் திறமையையும் காட்டி அவர்களை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று நினைக்காமல் அவர்கள் வெற்றி பெறுவதை உற்சாகப்படுத்துங்கள்.
No comments:
Post a Comment