Showing posts with label உடலரசியல். Show all posts
Showing posts with label உடலரசியல். Show all posts

Thursday, 3 December 2015

புதிய நூல் வெளியீடு

saathi

பௌத்தத்தை வீழ்த்தி புஷ்யமித்திர சுங்கன் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு நிகரானதொரு கொண்டாட்ட மனநிலையை பார்ப்பன மேலாதிக்கவாதிகள் பாரதிய ஜனதாவின் இப்போதைய ஆட்சி ஏற்பட்டதிலிருந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். முகலாயர் ஆட்சி, பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் காலனியாட்சிகள், பௌத்தம், சமணம், இஸ்லாம், கிறித்துவம், குடியாட்சிமுறை, மார்க்சீயம், பெரியாரியம், அம்பேத்காரியம், ஆகியவற்றின் குறுக்கீடுகளால் சாதியத்தில் ஏற்பட்ட சின்னஞ்சிறு மாற்றங்களைக் கூட அடித்துநிரவி மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுபோக அவர்கள் அஞ்சத்தக்க வேகத்தில் பணியாற்றி வருகிறார்கள். பார்ப்பன மேலாதிக்கவாதிகள் அரசியல்ரீதியாக தமக்குக் கிடைத்துள்ள வெற்றியைப் பண்பாட்டு மேலாதிக்க வெற்றியாக மாற்றிக் கொள்வதற்காக மேற்கொண்டு வரும் முயற்சிகள் வெற்றி பெறுமானால் இந்தியச்சமூகம் கடந்த காலத்தின் இருளுக்குள் மூழ்கடிக்கப்பட்டுவிடும் என்கிற அபாயத்தை முன்னுணரும் கூருணர்ச்சி கொண்ட அரசியல் விலங்குகளாக எழுத்தாளர்கள் மாற வேண்டியுள்ளது. ----

ஆதவன் தீட்சண்யா

( முன்னுரையிலிருந்து )

வெளியீடு-நூல்வனம்

விலை-ரூ75/-

DSC00204