Saturday 11 May 2019

ஒரு எழுத்தாளரை நினைவு கூறுவது என்பது....

ஒரு எழுத்தாளரை நினைவு கூறுவது என்பது.....
1. எழுத்தாளரின் படைப்புகள் குறித்துப் பேசுவது
2. எழுத்தாளரின் படைப்புகள் இலக்கியத்தில் வகிக்கும் பங்குபாகம் பற்றிப் பேசுவது
3. எழுத்தாளரின் படைப்புகளுக்கு கிடைத்த அங்கீரகாரங்களைப் பற்றிப் பேசுவது
4. எழுத்தாளருக்குக் கிடைத்திருக்கவேண்டிய அங்கீகாரத்தைப் பற்றிப் பேசுவது
5. எழுத்தாளரின் படைப்புகள்வழியே சமூகத்துக்குக் கொடுத்துள்ள கொடை ( அழகியல், அரசியல், தத்துவம், பண்பாடு ) பற்றிப் பேசுவது
6. எழுத்தாளரின் வாழ்க்கைக்கும் அவருடைய படைப்புகளுக்குமான உறவையும் முரணையும் பற்றிப் பேசுவது
7. எழுத்தாளரின் வாழ்க்கை அநுபவங்களைக் குறித்து பேசுவது
8. எழுத்தாளரின் வாழ்வில் அவர் பெற்றதையும் இழந்ததையும் பற்றிப் பேசுவது
9. எழுத்தாளரின் குடும்பம் செய்த தியாகங்களைப் பற்றிப் பேசுவது
10. எழுத்தாளரின் படைப்புகளை பரவலாகக் கொண்டு செல்வதற்கான வழிவகைகளைக் கண்டறிவது
11. எழுத்தாளரின் படைப்புகள் குறித்து ஆண்டு தோறும் நினைவுச்சொற்பொழிவு நடத்துவது. அதன்மூலம் புதிய தலைமுறைக்கு அவருடைய படைப்புகளை அறிமுகம் செய்வது..
12. எழுத்தாளரின் பெயரில விருது ஒன்றை அறிவிப்பது..
13. எழுத்தாளரின் படைப்புகள் வாசிப்புக்குக் கிடைக்கும்படி ஏற்பாடு செய்வது
14. எழுத்தாளர் வாழும்போதே அவரைப் பற்றி எழுத்துவடிவிலோ, ஆவணப்படமாகவோ, எடுத்துப் பதிவு செய்வது..
15. ஒரே நாளில் அனைத்து ஊர்களிலும் அவருடைய படைப்புகள் குறித்து உரையாடல் நடத்துவது..
தோப்பில் முகமது மீரான் நினைவாக...

No comments:

Post a Comment