Thursday 9 March 2017

சஞ்சீவி மாமா

 சிறார் இலக்கியம்
சஞ்சீவி மாமா

சிறார் இலக்கியத்தின் மிக முக்கியமான எழுத்தாளரான கோ.மா.கோ.இளங்கோவின் சிறார் நாவலான சஞ்சீவி மாமா சிறார் இலக்கியத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறது. யதார்த்தமான வாழ்வியலோடு பேச்சிராசுவின் பாலிய கால வாழ்வின் நினைவுகளை பேசுகிறது. எல்லோருடைய இளம்பருவத்திலும் சமூகத்தின் ஏற்றதாழ்வுகளைப் பற்றிய கேள்விகள் அரும்பியிருக்கும். பேச்சிராசு அவர்களுடைய ஊரில் உள்ள துப்புரவுத்தொழிலாளர்களைப் பற்றி யோசிக்கிறான். அதிலும் குறிப்பாக சஞ்சீவி மாமாவுடனான அவனுடைய உறவு, சொக்கத்தாயுடன் அவன் பேசும் உரையாடல், தன்னுடைய சொந்த சாதி கடைப்பிடிக்கும் சாதிவேற்றுமையைக் கண்டு ஏற்படும் கோபம், இயலாமை, என்று பேச்சிராசுவின் கதாபாத்திரம் தனித்துவத்தோடு விளங்குகிறது. 80-களில் இருந்த ஒரு சிற்றூரின் வாழ்வு அருமையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. நுட்பமான விவரணைகள் நாவலின் தரத்தை உயர்த்துகின்றன. தமிழ் சிறார் இலக்கியத்தில் தலித்துகளின் வாழ்வைப் பற்றி இவ்வளவு நெருக்கமாகப் பேசிய முதல் நாவல் சஞ்சீவி மாமா. மிக முக்கியமான வரவு.
வாழ்த்துக்கள் கோ.மா.கோ.இளங்கோ!
நாவலாசிரியரின் சுயவரலாற்றுக்குறிப்புகளும், பாலிய காலப்புகைப்படமும் கூடுதல் பலம் சேர்க்கிறது.

1 comment:

  1. வணக்கம்
    படிக்கத் தூண்டும் நூல் இணையத்தளத்தில் வேண்டி படிக்கலாமா?
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete