Friday 31 March 2017

விகடன் விருது -2016

விகடன் விருது -2016

மகிழ்ச்சி


2016-ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த சிறார் இலக்கிய நூலாக மாயக்கண்ணாடி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. அதற்கான விருது வழங்கும் விழா சென்னை நந்தம்பாக்கம் வணிக வளாகத்திலுள்ள பிரம்மாண்டமான அரங்கில் நேற்று நடைபெற்றது. மாயக்கண்ணாடி நூலுக்கான விருதினை குழந்தைகள் நாடகச்செயற்பாட்டாளர் வேலுசரவணனும், கவிஞர் சுகிர்தராணியும் வழங்கினார்கள். மாயக்கண்ணாடி நூலினை புதுமையான முறையில் தயாரித்திருந்த நூல்வனம்பதிப்பக உரிமையாளரும் என் அன்புத்தம்பியுமான மணிகண்டனை மிக்க நன்றியுடன்  நினைவு கூர்கிறேன்.

இந்த நூலினைக்கவனப்படுத்திய தமிழ் இந்து பத்திரிகை, ஏற்கனவே மாயக்கண்ணாடி நூலுக்கு விருது வழங்கிய கலை இலக்கியப்பெருமன்றத்துக்கும், விகடன் குழுமத்துக்கும் மிக்க நன்றி!

தமிழில் எழுதிக்கொண்டிருக்கும் சிறார் இலக்கிய எழுத்தாளர்களுக்கு இந்த விருதினைச் சமர்ப்பிக்கிறேன்.
நன்றி-
புகைப்படம் - பிரபு காளிதாஸ்

1 comment: