Thursday 28 May 2020

கொரோனாவும் ஹோமியோபதியும்


கொரோனாவும் ஹோமியோபதியும்

உதயசங்கர்
இன்று ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்விலும், ஒட்டுமொத்த சமூகவாழ்விலும் மிகப்பெரும் பாதிப்புகளை உருவாக்கி லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பலி வாங்கிக்கொண்டிருக்கிற கொரோனா உலகத்தையே கையறு நிலையில் தள்ளியிருக்கிறது. ஆங்கில மருத்துவமுறையில் கொரோனா கோவிட்19 நோய்க்கான மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ கண்டுபிடிக்கப்படாத நிலையில் அது ஒன்று தான் உண்மையான மருத்துவமுறை என்று நம்பியிருக்கும் கோடிக்கணக்கான மக்கள் பீதியில் உறைந்து போயிருக்கிறார்கள். இதற்கு முன்பு வந்த சார்ஸ் பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், டெங்குக்காய்ச்சல், சிக்கன்குனியா, போன்ற நோய்களுக்கும் சரியான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டியுள்ளது. இத்தகைய மருத்துவச் சூழலில் இந்த மாதிரியான கொள்ளை நோய்கள் உருவாவதற்கு இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை மனிதர்கள் வாழத்தவறியதும் இயற்கையைச் சூறையாடி பல்லுயிர்ப்பெருக்கத்தை அழித்ததும் மிக முக்கியமான காரணங்கள். மாற்றுமருத்துவமுறைகள் என்று சொல்லப்படுகிற மரபுவழி அல்லது பாரம்பரிய மருத்துவமுறைகள் எப்படி கொள்ளை நோய்களை எதிர்கொள்கின்றன என்று பார்க்கலாம்.
மாற்று மருத்துவமுறைகளான சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோ, யுனானி, மருத்துவமுறைகளில் புதிது புதிதாக தோன்றிக்கொண்டேயிருக்கும் நோய்களுக்கு புதிதுபுதிதாக மருந்துகளைக் கண்டுபிடிப்பதில்லை. ஏனெனில் இந்த மருத்துவமுறைகள் நோய்களைப் பற்றியோ, பரிசோதனைச்சாலை முடிவுகளைப் பற்றியோ மட்டுமே கவலைப்படுவதில்லை. நோய் பாதித்த மனிதனைப் பற்றியே கவனம் கொள்கின்றன. எல்லாமருத்துவமுறைகளிலும் நோயைப் பற்றிய தத்துவப்பார்வை உணடு. அந்தத் தத்துவப்பார்வையே அந்த மருத்துவமுறையின் அடிப்படையைத் தீர்மானிக்கிறது.
மாற்றுமருத்துவமுறைகளில் நோய் பற்றிய தத்துவம் மனிதனை முதன்மைப்படுத்துகிறது. நோய் என்றால் என்ன? ஆரோக்கியமான மனிதனின் உடலியல், உளவியல் நடவடிக்கைகளில் ஏற்படும் அசாதாரணமான மாற்றம் அல்லது மாறுமை. இந்த மாற்றத்திற்கு புறவயமான காரணிகளாக, விபத்து, விஷம், பாக்டீரியா, வைரஸ், பாதிப்புகளாக இருக்கலாம். அகவயமான காரணங்களாக அதீத உணர்வுநிலைகள், அதிர்ச்சி, துக்கம், துன்பம், அவமானம், கோபம், மகிழ்ச்சி, அழுகை, பிரிவுகளாக இருக்கலாம்.
 புறவயமான காரணிகளில் விபத்து, விஷம், போன்றவை நோய்களல்ல. எதிர்பாராமல் உடலுக்கு ஏற்படும் தீங்குகள். ஆனால் மற்ற காரணிகளான ,கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா, வைரஸ், போன்ற நுண்ணுயிரிகள் உடலியங்கியலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் தான் நோய்களாக மாறுகின்றன. உடலியங்கியல் நோயின் மூலம் தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சொல்கிறது. அதற்கான மொழியே நோய்க்குறிகள். ஆயிரக்கணக்கான நோய்க்குறிகளை உடலியங்கியல் உருவாக்கிக்கொண்டேயிருக்கிறது. வலி, வீக்கம், காய்ச்சல், இருமல் தும்மல், பசியின்மை, தூக்கமின்மை, இந்த நோய்க்குறிகளின் அல்லது நோய்மொழியின் மூலம் மனித உடலுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்களை மருத்துவர்கள் அறிகிறார்கள்.
பாக்டீரியா, வைரஸை விட மனிதன் உயிரியல்ரீதியில் மிக முன்னேறிய.உயிரினம். மனித உடலின் பாதுகாப்பு அமைப்பு நவீனமானது. தன்னைப் புதுப்பித்துக்கொண்டேயிருப்பது. உடலில் நுழையும் தீய நுண்ணுயிரியைப் பற்றிய அத்தனை விவரங்களையும் உடனே தெரிந்து கொண்டு அதற்கு எதிராக தன்னுடைய பாதுகாப்பு அமைப்பையும் வியூகங்களையும் அமைத்துக் கொள்கிறது. அதையும் தாண்டி மனிதன் நோயுறுகிறானென்றால் அதற்குக் காரணம் பாதுகாப்பு அமைப்பின் பலவீனம் அல்லது நோயெதிர்ப்பு சக்தியின் பலவீனம்.
மாற்று மருத்துவமுறைகள் இந்தப்புள்ளியில் தான் தங்களுடைய கவனத்தைக் குவிக்கின்றன. புதிது புதிதாக எத்தனை வைரஸ்கள், பாக்டீரியாக்கள் வந்தாலும் மாற்றுமருத்துவமுறைகள் அவற்றின் தோற்றம், வளர்ச்சி, வடிவம், குணம், இவற்றைப் பற்றிக் கவலைப்படுவதை விட மனிதனின் பாதுகாப்பு அரண்களைப் பலப்படுத்துகின்றன. அதனால் உலகம் முழுவதும் எத்தகைய கொள்ளை நோய்கள் வந்தபோதும் மாற்று மருத்துவமுறைகள் தங்களுடைய அடிப்படையான நோயுற்ற மனிதனுக்கு மருந்து என்ற கொள்கையிலிருந்து விலகுவதில்லை.
பொதுவாகவே கொள்ளைநோய்க்காலத்தில் நுண்ணியிரிகள் மிகுந்த பலத்துடன் இருக்கும். ஏனெனில் ஒவ்வொரு நோயாளரிடமிருந்து மற்றொரு நோயாளரைத் தொற்றும்போது அவற்றின் வீரியம் அதிகரித்துக் கொண்டே போகும். அதனால் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும். அந்தக் காலகட்டத்தில் கொள்ளைநோய்களின் நோய்க்குறிகள் பெரும்பாலும் ஒரே மாதிரி இருப்பதால் மாற்றுமருத்துவத்தில் அந்த நோய்க்குறிகளின் தன்மைக்கேற்ப மருந்துகளை தடுப்பு மருந்தாகவும், நோய் பாதித்தவர்களுக்கு துயர் தீர்க்கும் மருந்தாகவும் கொடுக்கின்றனர்.
ஹோமியோபதி ஒத்தது ஒத்ததை நலமாக்கும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஹோமியோ மருந்துகள் மனிதர்களிடம் நிரூபணம் செய்யப்பட்டவை என்பதால் எந்தப் பக்கவிளைவுகளும் இல்லாதவை. நோய்க்குறியியலையே நோயறியும் முறையாகக் கொண்டதால் சோதனைச்சாலை முடிவுகளை மட்டுமே நம்பி மருந்துகளை பரிந்துரைப்பதில்லை. 1796 – ஆம் ஆண்டு ஹோமியாபதியைக் கண்டுபிடித்த சாமுவேல் ஹனிமன் ( 1755 – 1843 ) காலத்திலேயே அதாவது 1800-களில் ஸ்கார்லெட் காய்ச்சல் என்ற கொள்ளைநோய்க்கு மருந்து கொடுத்து குணமாக்கியுள்ளார். பின்னர் தொடர்ந்து 19-ஆம் நூற்றாண்டில் உலகமுழுவதுமுள்ள மக்களைத் தாக்கிய கொடிய கொள்ளை நோய்களான, காலரா, ப்ளேக், மஞ்சள் காய்ச்சல், டிப்தீரியா, இன்புளூயன்சா நோய்களுக்கு தடுப்பு மருந்துகளும், நோய் பாதித்தவர்களுக்கு மருந்துகளும் கொடுத்துள்ளனர். இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் ஹோமியோபதி மருந்துகளை சாப்பிட்ட நோயாளர்கள் மிகவிரைவாக குணமாகியிருக்கிறார்கள். உயிரிழப்புகள் மிக மிகக்குறைவு.
1813 – ஆண்டில் வந்த டைபஸ் காய்ச்சலில் ஹோமியோபதி மருந்து சாப்பிட்ட 180 பேரில் இரண்டுபேர் மட்டுமே மரணமடைந்திருக்கிறார்கள்.
1830, மற்றும் 1854 ஆம் ஆண்டுகளில் வந்த காலரா நோயில் ஹோமியோமருந்துகளைச் சாப்பிட்டு முறையே 91% -மும், 93%-மும் குணமடைந்திருக்கிறார்கள். இதைக் குறிப்பிடுவதற்குக் காரணமென்னவென்றால் அப்போது வழக்கத்திலிருந்த மருத்துவமுறையில் 60% முதல் 70% வரை மட்டுமே குணமடைந்தார்கள்.
1850 களில் வந்த மஞ்சள் காய்ச்சலிலும் டிப்தீரியா நோயிலும் ஹோமியோபதி குறிப்பிடத்தகுந்த அளவுக்கு நலமாக்கலை நிகழ்த்தியுள்ளது.
1918 – ஆண்டு உலகைக் குலுக்கிய ஸ்பானிஷ் ப்ளூ என்ற காய்ச்சலில் ஹோமியோபதி மருந்து சாப்பிட்ட 26000 பேரில் 1% பேரே மரணமடைந்தனர்.
சமீபத்தில் மக்களைத் தாக்கிய சார்ஸ் பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், எலிக்காய்ச்சல், சிக்கன்குனியா, போன்ற நோய்களிலும் ஹோமியோ மருந்துகள் மிகவிரைவாகவும் நிரந்தரமாகவும் குணப்படுத்தியதை அனைவரும் அறிவார்கள். பல மாநில அரசுகள் ஹோமியோமருந்துகளை மேற்சொன்ன நோய்களுக்குத் தடுப்புமருந்தாக பரிந்துரை செய்தது.
ஹோமியோ மருந்துகள் உடலின் நோயெதிர்ப்புத்திறனைப் பலப்படுத்துவதால் நோய்த்தொற்று ஏற்படுதில்லை. அப்படியே நோய் வந்தாலும் அதன் பாதிப்பு குறைந்தேயிருக்கிறது. இதனால் கொரோனா என்றில்லை எந்த வைரஸாக இருந்தாலும் அவற்றின் வீரியமும் குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும்.
எனவே கொரோனா நோய்க்கு  ஆர்சனிக் ஆல்பம் – 30 என்ற ஹோமியோமருந்தை வாங்கி எல்லோரும் பயன்படுத்துவதின் மூலம் இனிவரும் காலங்களில் கொரோனோவுடன் வாழப்பழக முடியும். கொரோனோவை வீட்டை விட்டு மட்டுமில்லை நாட்டை விட்டும் விரட்டமுடியும்.  

1 comment: