Saturday 19 December 2015

மெல்லின தேசம்

மெல்லின தேசம்
உதயசங்கர்


வத்திராயிருப்பு தெ.சு.கவுதமனின் மெல்லின தேசம் கவிதைப்புத்தகம் வாசித்தேன். அன்றாட வாழ்க்கையிலிருந்து அவர் தனக்கான கவிதைத் தருணங்களை கண்டடைகிறார். சுற்றிலும் நடக்கிற அத்தனை நிகழ்வுகளையும், கதாபாத்திரங்களையும் தன்னுடைய கவிதைகளுக்குள் கொண்டு வந்து சேர்க்கிறார் கவுதமன். அபூர்வமான அவதானிப்பு சில கவிதைகளில் கவித்துவ அமைதியைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. அம்மாவைப்போலவே என்ற கவிதையின் முடிப்பில் ஒரு விந்தை நிகழ்கிறது.பெண்நிலை பற்றிய கவிதைகள் கவனிப்புக்குரியவை. சமூக மனதை நோக்கிய கேள்விகளும், சமூகப்பிரச்னைகளைப் பற்றிய கவிதைகளும் கலந்து விரவிக் கிடக்கின்றன. சற்றே பெரிய கவிதைகளில் கவிதை அமைப்பு இன்னும் மேம்பட வேண்டும். ஆனால் குறுங்கவிதைகளில் மிகச் சிறப்பாக தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தக் கவிதைத்தொகுப்பின் மூலம் மேலும் ஒருபடி முன்னேறி மிகுந்த நம்பிக்கையளிக்கிறார் வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன். வாழ்த்துக்கள் கவுதமன்!

No comments:

Post a Comment