Sunday 18 January 2015

இரண்டு நூல்கள் வெளியீடு

பச்சை நிழல் ( குழந்தைக்கதைகள் )

உதயசங்கர்

முன்காலத்தைப் போல குழந்தைகளுக்கு சொல்லக் கதைகள் இல்லை எனும் மேம்போக்குக் கருத்துகளை மறுக்கும் விதமாக குழந்தைகளுக்கான நல்ல பல கதைகளை இப்புத்தகம் தாங்கி வந்துள்ளது. இந்தக் கதைகளை வாசிக்கும் குழந்தைகளின் கற்பனை உலகத்தைத் தாங்களாகவே மென்மேலும் விரித்துச் செல்லும் சாத்தியங்களை இக்கதைகள் உருவாக்கித் தருகின்றன. வெறும் ஏட்டுக்கல்வி மட்டுமே குழந்தைகளை வளர்த்தெடுத்துவிடும் என்ற மூடத்தனத்திலிருந்து விடுவித்து குழந்தைகளின் நிஜ உலகத்தை குழந்தைகளுக்குத் தெளிவாக உணர்த்துவதோடு பெற்றோருக்கும் சமூகத்துக்கும் அக்கறையோடு தெளிவுறுத்தத் தலைப்படுகிறது இப்புத்தகம்.

வெளியீடு – என்.சி.பி.ஹெச்

விலை- ரூ.60/

 

லால் சலாம் காம்ரேட் இ.எம்.எஸ். ( இ.எம்.எஸ். நினைவுக்கட்டுரைகள் )

தொகுப்பும் மொழிபெயர்ப்பும் – உதயசங்கர்/உத்ரகுமாரன்

இ.எம்.எஸ். என்ற ஆளுமையைப் புரிந்து கொள்வதற்கு ஒரு மனித ஆயுட்காலம் முழுவதும் போதாது என்று கூடச் சொல்லலாம். அரசியலில் இ.எம்.எஸ்ஸினுடைய மிகப்பெரிய வெற்றி என்பது அவர் முதல் மந்திரியானதிலோ, கட்சியினுடைய பொதுச்செயலாளரானதிலோ இல்லை. தன்னுடைய ஆதரவாளர்களையும் எதிராளிகளையும் ஒரு நிமிடம் கூட உறங்க அநுமதிக்காமல் என்றென்றும் அவர்களைக் கேள்விகளிலும் விசாரணைகளிலும் ஈடுபடச்செய்து இந்திய அரசியலை பெரிதும் அறிவுப்பூர்வமாக மாற்றியது தான் என்று நான் நம்புகிறேன்.

மலையாள எழுத்தாளர்- சுகுமார் அழிக்கோடு

வெளியீடு- என்.சி.பி.ஹெச்.

விலை – ரூ60/

1 comment:

  1. வாழ்த்துக்கள் ஐயா
    அவசியம் வாங்கிப் படிக்கின்றேன்

    ReplyDelete