Thursday 4 September 2014

யாரும் யாரும்

உதயசங்கர்

unspeakable-grief-of-knowing

யாரும் காணாத ஒரு கனவில்

யாரும் கேட்காத ஒரு இசை

யாரும் சொல்லாத ஒரு சொல்லில்

யாரும் படைக்காத ஒரு படைப்பு

யாரும் உண்ணாத ஒரு விருந்தில்

யாரும் தின்னாத ஒரு பண்டம்

யாரும் நுகராத ஒரு மணமுள்ள மலரில்

யாரும் காணாத ஒரு வண்டு

யாரும் செய்யாத ஒரு காதலில்

யாரும் தொடாத ஒரு ஸ்பரிசம்

யாரும் பார்க்காத ஒரு காலத்துகளில்

யாரும் மரணிக்காத ஒரு மரணம்

யாரும் இல்லாத பெருவெளியில்

யாரும் யாருமற்ற நான்.

DSC00088

1 comment: