Monday 19 November 2012

ஊசிப்போன முத்தம்

உதயசங்கர்Mohan Das (79)

 

ஊசிப்போன முத்தமொன்று

என் வாசல் கதவைத் தட்டியது

கதவைத் திறக்குமுன்னே

வாசனை துளைத்தது

தயக்கம் என் கைகளைக்

கட்டிவிட முயற்சித்தது

எச்சரிக்கை என் கால்களில்

விலங்கினைப் பூட்டியது

பயம் என் கண்களில்

இருளைப் பூசியது

முத்தப்பசியினால்

உயிர்வாடிக் கிடந்தாலும்

கதவைத் திறக்கவில்லை

ஊசிப்போன முத்தமேயானாலும்

சுயமரியாதையுள்ளதல்லவா?

என்னைப் புறக்கணித்து  ஊசிப்போன முத்தம் 

சென்ற பாதையெங்கும்

மோப்பம் பிடித்துத் திரிகிறேன்.

கிடைக்காதா ஊசிப்போன முத்தத்தின்

  சிறுருசியேனும்?

புகைப்படம்- மோகன்தாஸ் வடகரா

1 comment: