Tuesday 2 August 2016

சிறுவர் இலக்கியம் - இரண்டு நூல்கள் வெளியீடு

பறந்து பறந்து
சி.ஆர்.தாஸ்
தமிழில்-உதயசங்கர்
வெளியீடு-வானம் பதிப்பகம்
தொடர்புக்கு - 9176549991

பெரியவர்கள் உறங்கும்போது மட்டுமே கனவு காண்பவர்கள். ஆனால் குழந்தைகள் தங்களுடைய குழந்தைப்பருவத்தையே கனவாகக் காண்பவர்கள். படைப்பூக்கம் மிக்க அந்தக்கனவுகளை மட்டும் நம்மால் சரியாக மொழிபெயர்க்க முடியுமானால், அவற்றைச் செயல்படுத்த முடியுமானால், இந்த உலகமே வண்ணமயமான கனவாகி விடும். குழந்தைகளின் உலகில் மாயாஜாலங்களே நிறைந்திருக்கின்றன. குழந்தைகள் ஒரு தீப்பெட்டியை பஸ்ஸாக மாற்றிவிடும் வல்லமை கொண்டவர்கள். நான்கு தீப்பெட்டிகள் சேர்ந்தால் அதுவே ரயிலாக மாறிவிடும். பார்க்கிற அனைத்தையும் எந்தத் தயக்கமும் இன்றி போலச்செய்து பார்க்கிறவர்கள். பெற்றோர்களும் கல்விமுறையும் எவ்வளவுதான் அவர்களை வசக்கினாலும், மூளைச்சலவை செய்தாலும் தங்கள் குழந்தைமையை, படைப்பூக்கத்தைத் துளிர் விடச்செய்யும் மந்திரம் தெரிந்தவர்கள்.
முன்னுரையிலிருந்து...
மரணத்தை வென்ற மல்லன்
உரூபு
தமிழில் - உதயசங்கர்
வெளியீடு- வானம் பதிப்பகம்
தொடர்புக்கு-9176549991

யதார்த்தத்தில் நடக்க முடியாத ஒரு காரியத்தை மானசீகமாக நடத்தி வைக்க, அல்லது நடந்ததாக நினைத்துக்கொள்ள மந்திரங்கள் பயன்படுகின்றன. இந்த மந்திரங்களே மாயச்செயல்களைச் செய்வதாகக் கற்பிதங்கள் செய்யப்படுகின்றன. மாயாஜாலங்களை மனம் நம்புகிறது. நம்பவேண்டும் என்று ஆசைப்படுகிறது. அயதார்த்தமும், மாயஎதார்த்தமும் குழந்தை மனதின் விளைவே. குழந்தைகளே மாயாஜாலங்களின் படைப்பாளிகளாக இருக்கிறார்கள். குழந்தமையை இழந்து விடாத பெரியவர்களும் மாயாஜாலங்களின் வண்ணச்சிறகுகளைப் பூட்டி அவ்வப்போது தங்கள் குழந்தமைவானில் பறந்து திரிகிறார்கள். குழந்தைகளும் குழந்தைகளாக இருப்பவர்களும் பாக்கியவான்கள்.
முன்னுரையிலிருந்து..

1 comment:

  1. அவசியம் வாங்கிப் படிப்பேன் ஐயா
    நன்றி

    ReplyDelete